Monday, 13th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

விசைத்தறிகள் மீண்டும் இயக்கம்

நவம்பர் 21, 2023 12:00

பள்ளிபாளையம்: நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில் ஏராளமான விசைத்தறி பட்டறைகள் செயல்பட்டு வருகின்றது.

இந்நிலையில் விசைத்தறி தொழிலை சார்ந்து ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

தீபாவளிப் பண்டிகையை ஒட்டி சுறுசுறுப்பாக பணிகளை தொழிலாளர்கள் மேற்கொண்டனர்.  

இந்நிலையில் தீபாவளி பண்டிகைக்கு ஒரு வாரம் முழுமையான விடுமுறை விடப்பட்டிருந்தது.. இதன் காரணமாக கடந்த ஒரு வார காலமாக விசைத்தறி கூடங்கள் முழுமையாக செயல்படாமல் இருந்தது .

மேலும், தொழிலாளர்களும் தீபாவளி பண்டிகைக்கு சொந்த வேலையாக ஊர்களுக்கு செல்வது, உள்ளிட்ட தங்களுக்குரிய வேலைகளை செய்த நிலையில் நேற்று திங்கட்கிழமை முதல் பள்ளிபாளையத்தில் பல்வேறு இடங்களில் தொழிலாளர்கள் பணிக்கு திரும்பியதால், பரவலாக விசைத்தறிகள் மீண்டும் இயங்கத் தொடங்கியது.

மேலும், பள்ளிபாளையம் குமாரபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் வணிக, வர்த்தக நிறுவனங்களில் பணியாற்றிய வெளிமாநில, வெளி மாவட்ட, தொழிலாளர்கள் மீண்டும் நேற்று முதல் பணிக்கு திரும்பி உள்ளதால் பள்ளிபாளையம், குமாரபாளையம் பகுதிகளில் இயல்பு நிலை திரும்பி உள்ளது

தலைப்புச்செய்திகள்